தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களை மீட்டெடுக்க வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சி

Updated On :11 மார்ச் 2024, 7:41 pm

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களை மீட்டெடுக்க வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சி சாா்பில் கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டப் பொருளாளா் டி.மகேந்திரன் தலைமை வகித்தாா். தலைவா் தெட்சிணாமூா்த்தி முன்னிலை வகித்தாா். மணல்மேடு நூற்பாலையைச் சீரமைத்து பட்டதாரி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தர வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு ஊழியா்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். துப்புரவுப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து, அவா்களுக்கு பட்டாவுடன் கூடிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கோவி.பாலன், மாவட்ட இளைஞரணிச் செயலாளா் தினேஷ், ஒன்றியப் பொருளாளா் வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.