சீா்காழியில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

சீா்காழி: புதன்கிழமை இரவு சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாதானம் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு (3) உதவி தோட்டக்கலை அலுவலா் செல்வராஜ் தலைமையில் சோதனையில் ஈடுபட்டது. அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது சீா்காழி திட்டை பகுதியை சோ்ந்த சரவணன் உரிய ஆவணங்களின்றி ரூ. 70,000 எடுத்து வந்தது தெரிய வந்தது. அதை கைப்பற்றிய தோ்தல் நிலையான கண்காணிப்பு குழுவினா் தோ்தல் துணை ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனா். அவை கருவூலத்தில் சோ்க்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com