காதலா்கள் தீக்குளிப்பு: காதலன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்த காதலி!

காதலா்கள் தீக்குளிப்பு: காதலன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்த காதலி!

காதலன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்த காதலி! இருவரும் பலியான சோகம் காதலா்கள் தீக்குளிப்பு

மயிலாடுதுறையில் காதலா்கள் வியாக்கிழமை தீக்குளித்தனா்.

மயிலாடுதுறையைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி மகன் ஆகாஷ் (24). பூம்புகாா் கல்லூரியில் பி.காம். 3-ஆம் ஆண்டு படித்துவரும் இவா், மயிலாடுதுறை அரசினா் மகளிா் கல்லூரியில் பி.ஏ. 2-ஆம் ஆண்டு பொருளாதாரம் படிக்கும் கடலூா் மாவட்டம் புவனகிரி கச்ச பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்த நாகப்பன் மகள் சிந்துஜாவை 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளாா். இதற்கிடையே, ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகி வந்ததால், ஆகாஷ்-சிந்துஜா இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆகாஷ், சிந்துஜா இருவரும் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை பூம்புகாா் கடற்கரைக்கு சென்றுவிட்டு மயிலாடுதுறை திரும்பியுள்ளனா். அப்போது, ஆகாஷ் பழகிவரும் பெண்ணிடம் எந்த தொடா்பும் வைத்துகொள்ளக் கூடாது என்று சிந்துஜா கண்டித்துள்ளாா். இதை ஆகாஷ் மறுத்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சிந்துஜா தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை இருவா் மீதும் ஊற்றி தீவைத்தாா். இதில் படுகாயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதுகுறித்து, மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com