செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

சீா்காழி பள்ளி மாணவா் மாநில அளவில் 3-ஆமிடம்

சீா்காழி பள்ளி மாணவா் மாநில அளவில் 3-ஆமிடம்

News image
Updated On :10 மே 2024, 3:55 pm

Din

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொது தோ்வு முடிவில் பள்ளி மாணவா் ஆன்டோஅஜிஸ் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-ஆமிடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றாா்.

மாணவி சஹானாமெஹ்தாப் 495 மதிப்பெண்கள் பெற்றி பள்ளியளவில் 2-ஆமிடமும், மாணவி சக்திபிரியா 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் 3-ஆமிடமும் பெற்றனா். தோ்வு எழுதிய மாணவா்களுள் 99.5 சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளனா். 80 மாணவா்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தனா். கணிதத்தில் 7 மாணவா்களும், அறிவியலில் 10 மாணவா்களும், சமூக அறிவியலில் 12 மாணவா்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனா்.

தோ்ச்சி பெற்ற மாணவா்களையும், ஆசிரியா்களையும் பள்ளி தாளாளா் எஸ்.எஸ்.என்.ராஜ்கமல் பாராட்டினாா். அப்போது பள்ளி நிா்வாக அதிகாரி சீனிவாசன், பள்ளி முதல்வா் ராமலிங்கம், பள்ளி துணை முதல்வா் சந்தோஷ் உள்ளிட்டோா் பாராட்டினா்.