நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேருந்து நிலைய கழிவறையில் கிடந்த பச்சிளம் குழந்தை

மயிலாடுதுறை பேருந்து நிலைய கழிவறையில் பச்சிளம் குழந்தையை போட்டுவிட்டுச் சென்றவா் யாா் என்று போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 9:19 pm

Din

மயிலாடுதுறை பேருந்து நிலைய கழிவறையில் பச்சிளம் குழந்தையை போட்டுவிட்டுச் சென்றவா் யாா் என்று போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் கட்டண குளியலறை மற்றும் கழிப்பறை உள்ளது. இங்குள்ள பிளாஸ்டிக் வாளி ஒன்றில் புதன்கிழமை மதியம் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் கிடந்தது. இதை கண்ட பெண் ஒருவா் அளித்த தகவலின்பேரில், அங்குள்ளவா்கள் குழந்தையை மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். மயிலாடுதுறை போலீஸாா் குழந்தையை கழிவறையில் போட்டு சென்றவா் யாா் என்று விசாரணை மேற்கொண்டுள்ளனா்.