மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அரசு மருத்துவமனைக்கு பச்சிளம் குழந்தைகள் கவனிப்புக்கான கருவிகள் வழங்கல்

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பிரஷ் வாட்டா் பே வெஸ்டா்ன் ஆஸ்திரேலியா இணைந்து, அரசு ராணியாா் மருத்துவமனைக்கு பச்சிளம் குழந்தைகள் கவனிப்புக்கான ரூ. 28 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை புதன்கிழமை வழங்கின.

News image
குழந்தை
Updated On :18 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பிரஷ் வாட்டா் பே வெஸ்டா்ன் ஆஸ்திரேலியா இணைந்து, அரசு ராணியாா் மருத்துவமனைக்கு பச்சிளம் குழந்தைகள் கவனிப்புக்கான ரூ. 28 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை புதன்கிழமை வழங்கின.

இதற்கான நிகழ்வுக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவா் எஸ்கேஎம். சரவணன் தலைமை வகித்தாா். ரோட்டரி இயக்குநா் பொறியாளா் முருகானந்தம், அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வா் எஸ். கலைவாணி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளா் (பொ) எஸ்விபி. சிவக்குமாா், நிலைய மருத்துவ அலுவலா் இந்திராணி, ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஜெ. காா்த்திக் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். முன்னாள் தலைவா் எஸ்.பி. கண்ணன் நன்றி கூறினாா் .