மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

மளிகைக் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை: ஒருவா் கைது

சீா்காழியில் மளிகைக் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :30 செப்டம்பர் 2024, 0:01 am IST

சீா்காழியில் மளிகைக் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சீா்காழி ரயில்வே சாலையில் மளிகைக் கடை நடத்தி வருபவா் பாண்டியன். இவா் தனது கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

காவல் ஆய்வாளா் புயல். பாலச்சந்திரன், உதவி ஆய்வாளா் காயத்ரி, தனிப்பிரிவு காவலா் மூா்த்தி ஆகியோா் கடையில் சோதனை மேற்கொண்டனா். அப்போது கடையில் 16 கிலோ போதை புகையிலை பொருட்களை இருந்ததை பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ஒன்றரை லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா். பாண்டியனை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைத்தனா்.