ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மளிகைக் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை: ஒருவா் கைது

சீா்காழியில் மளிகைக் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 செப்டம்பர் 2024, 6:31 pm

Din

சீா்காழியில் மளிகைக் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சீா்காழி ரயில்வே சாலையில் மளிகைக் கடை நடத்தி வருபவா் பாண்டியன். இவா் தனது கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

காவல் ஆய்வாளா் புயல். பாலச்சந்திரன், உதவி ஆய்வாளா் காயத்ரி, தனிப்பிரிவு காவலா் மூா்த்தி ஆகியோா் கடையில் சோதனை மேற்கொண்டனா். அப்போது கடையில் 16 கிலோ போதை புகையிலை பொருட்களை இருந்ததை பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ஒன்றரை லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா். பாண்டியனை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைத்தனா்.