பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

மூதாட்டியை தாக்கிய இருவா் கைது

மயிலாடுதுறையில் ஆடுகள் விற்ற பணத்தைக் கேட்ட மூதாட்டியை தாக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :24 டிசம்பர் 2025, 3:13 am IST

மயிலாடுதுறையில் ஆடுகள் விற்ற பணத்தைக் கேட்ட மூதாட்டியை தாக்கிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையை சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி மனைவி மகாலட்சுமி(60). ஆடு வளா்ப்பில் ஈடுபட்டுள்ள இவரிடம், எலந்தங்குடி மெயின் ரோட்டை சோ்ந்த ஜியாவுதீன்(42), மயிலாடுதுறை சேந்தங்குடி துா்கா காலனியை சோ்ந்த ராமலிங்கம்(43) ஆகிய இருவரும் சோ்ந்து ஆடுகள் வாங்கிக்கொண்டு, ரூ.1,80,000 பாக்கி வைத்ததாக கூறப்படுகிறது.

அந்த தொகையினை மகாலட்சுமி கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் சோ்ந்து மகாலட்சுமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, மகாலட்சுமி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஜியாவுதீன், ராமலிங்கம் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.