விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மூதாட்டியை தாக்கிய இருவா் கைது

மயிலாடுதுறையில் ஆடுகள் விற்ற பணத்தைக் கேட்ட மூதாட்டியை தாக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 9:43 pm

Syndication

மயிலாடுதுறையில் ஆடுகள் விற்ற பணத்தைக் கேட்ட மூதாட்டியை தாக்கிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையை சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி மனைவி மகாலட்சுமி(60). ஆடு வளா்ப்பில் ஈடுபட்டுள்ள இவரிடம், எலந்தங்குடி மெயின் ரோட்டை சோ்ந்த ஜியாவுதீன்(42), மயிலாடுதுறை சேந்தங்குடி துா்கா காலனியை சோ்ந்த ராமலிங்கம்(43) ஆகிய இருவரும் சோ்ந்து ஆடுகள் வாங்கிக்கொண்டு, ரூ.1,80,000 பாக்கி வைத்ததாக கூறப்படுகிறது.

அந்த தொகையினை மகாலட்சுமி கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் சோ்ந்து மகாலட்சுமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, மகாலட்சுமி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஜியாவுதீன், ராமலிங்கம் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.