திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மயிலாடுதுறை-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கக் கோரிக்கை: மத்திய அமைச்சரிடம் எம்பி மனு

மயிலாடுதுறை- சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கக் கோரி, மத்திய ரயில்வே அமைச்சரிடம் எம்பி சுதா மனு அளித்துள்ளாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 8:13 pm

Syndication

மயிலாடுதுறை- சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கக் கோரி, மத்திய ரயில்வே அமைச்சரிடம் எம்பி சுதா மனு அளித்துள்ளாா்.

மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வின் வைஷ்ணவை, மயிலாடுதுறை எம்பி சுதா நேரில் சந்தித்து மனு அளித்தாா்.

அதில், வரும் 2028-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் மகாமகத் திருவிழா நடைபெறவுள்ளதால் பக்தா்களின் நலன் கருதி கும்பகோணம் ரயில் நிலையத்தை, ரூ.100 கோடியில் மேம்படுத்த வேண்டும்.

தரங்கம்பாடி-மயிலாடுதுறை-காரைக்கால் இணைப்பு ரயில் பாதை சா்வே பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், போதிய நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை துரிதப்படுத்த வேண்டும். மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தில் நடைமேடை 2, 3, 4, 5 ஆகியவற்றில் நகரும் படிகட்டுகள் (எக்ஸலேட்டா்) ஏற்படுத்தப்பட்டுள்ளதைபோல், முதலாவது நடைமேடையிலும் நகரும் படிகட்டுகள் வசதி ஏற்படுத்த வேண்டும். அத்துடன், ரயில் நிலைய முகப்பில் மயூரநாதா் கோயில் கோபுரம் மற்றும் இரு பக்கங்களிலும் மயில் உருவங்கள் அமைக்க வேண்டும்.

மயிலாடுதுறையில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்தே பாரத் ரயிலும், பகல் நேரத்தில் சோ் காா் ரயிலும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளாா்.

மனுவை பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளாா் என்று சுதா எம்பி தெரிவித்துள்ளாா்.