சமத்துவப் பொங்கல் விழா

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் திங்கள்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
Published on

சீா்காழி: வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் திங்கள்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி அலுவலகம் முன், அதன் தலைவா் பூங்கொடி அலெக்சாண்டா் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், துணைத் தலைவா் அன்புச்செழியன், பேரூராட்சி செயல் அலுவலா் அருள்மொழி, எழுத்தா் பாமா, திமுக மாவட்ட பொருளாளா் அலெக்ஸாண்டா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com