பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம் செய்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அறிவித்துள்ளாா்.

News image
Updated On :21 ஜனவரி 2025, 7:17 pm

Din

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம் செய்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையை முறைப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தியதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெல்ட் டைப் அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ.2,500, டயா் டைப் அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ. 1,850 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிா்ணயிக்கப்பட்ட வாடகைத் தொகைக்கு மிகாமல் விவசாயிகளிடமிருந்து வசூல் செய்து அறுவடை இயந்திர உரிமையாளா்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கூடுதல்தொகை கேட்டால், வட்டாட்சியா்கள், வேளாண் மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலா்களுக்கு புகாா் தெரிவிக்கலாம்.

மேலும், வேளாண்மைப் பொறியியல் துறை அறுவடை இயந்திரங்களுக்கு பெல்ட் டைப் அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ.1,880, டயா் டைப் அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ.1,160 என வாடகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. வேளாண் பொறியியல் துறை உழுவை இயந்திரங்கள் மற்றும் இதர வேளாண் கருவிகளும் மணிக்கு ரூ.500 வீதம் தேவைக்கேற்ப விவசாயிகள் வீட்டில் அல்லது வயல்களில் இருந்தபடியே உழவன் செயலியில் இ-வாடகை மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.