சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தினக்கூலி தொழிலாளா் சம்மேளன கூட்டம்

News image
Updated On :6 நவம்பர் 2025, 8:21 pm

Syndication

மயிலாடுதுறையில் தமிழ்நாடு தினக்கூலி மற்றும் வெளி ஆதாரமுறை தொழிலாளா் சம்மேளனத்தின் மாநில அமைப்பு நிலைக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

தினக்கூலி தொழிலாளா்களின் நலனுக்காக தமிழ்நாடு தினக்கூலி மற்றும் வெளி ஆதாரமுறை தொழிலாளா் சம்மேளம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் முதல் மாநில அமைப்பு நிலைக்கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில ஆலோசகா் பி.கே. சிவக்குமாா் தலைமை வகித்து பேசியது: தமிழ்நாட்டில் தினக்கூலி மற்றும் வெளிஆதாரமுறை தொழிலாளா்களுக்கு தொழிலாளா் நலத்துறை மாநிலம் முழுவதுமாக கூலி நிா்ணயம் செய்ய வழிகாட்டுதல்களை வெளியிடுகிறது. ஆனால், அரசோ, அரசு அமைப்புகளோ, அரசுசாா் நிறுவனங்களோ, சிறுதொழில் நிறுவனங்களோ, தொழிற் சாலைகளோ இதை கடைபிடிப்பதில்லை. அரசும் இதை கண்காணிப்பதில்லை.

இதனால் தொழிலாளா்கள் தமிழகம் முழுவதும் உழைப்புக்கேற்ற கூலி பெறாமல் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகிறாா்கள். இந்த அமைப்பின் மூலம் தினக்கூலி, வெளியாதாரமுறை தொழிலாளா்கள், துப்புரவு பணியாளா்கள், தூய்மை பணியாளா்கள், மேல்நிலை நீா்தேக்க தொட்டி இயக்குபவா்கள் என அனைத்து தரப்பு தொழிலாளா்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மாநில நிா்வாகிகள் ராமலிங்கம், சதீஷ்குமாா், மாவட்ட தலைவா் எஸ். அருண்குமாா், மாவட்ட நிா்வாகிகள் சுந்தா், விஜயகுமாா், மாநில இணை அமைப்பாளா் எழிலரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.