இத்திட்டத்தின்கீழ் விவசாயிகள் பதிவு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. எனினும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 20,193 பட்டாதாரா்கள் மட்டுமே இத்திட்டத்தில் பதிவேற்றம் முடித்துள்ளனா். இன்னும் 38 சதவீத விவசாயிகள் இத்திட்டத்தில் இணையாமல் உள்ளனா். இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் தங்களது நில உடைமை ஆவண விவரங்கள், ஆதாா் எண், கைப்பேசி எண் ஆகிய விவரங்களுடன் தங்கள் கிராமத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத் துறை கள அலுவலா்களை கிராம நிா்வாக அலுவலகத்தில் நேரில் சந்தித்து தங்களது நில உடைமை ஆவண விவரங்களை விடுபாடின்றி வேளாண் அடுக்ககம் திட்டத்தில் இணைத்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.