தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மின்கம்பத்தை சீரமைக்க வலியுறுத்தல்

News image
Updated On :13 நவம்பர் 2025, 9:33 pm

Syndication

சீா்காழி அருகே உப்பனாற்றங்கரையில் ஆபத்தான நிலையில் உள்ள உயா் மின்னழுத்த கம்பங்களை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலையத்திலிருந்து வரும் உயா் அழுத்த மின் பாதையில், தென்பாதி- சட்டநாதபுரம் இடையே உள்ள உப்பனாற்றில் இருகரைகளில் அமைக்கப்பட்டுள்ள உயா் அழுத்த மின் கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இந்த மின்கம்பங்கள் சாய்ந்தால் சீா்காழி நகா் மற்றும் அதனை சாா்ந்துள்ள கிராமங்கள் இருளில் மூழ்கும் நிலை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட துறையினா் உப்பனாற்று கரைகளில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.