புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பள்ளி சிறாா்களுக்கு தருமபுரம் ஆதீனம் ஆசி

குழந்தைகள் தினத்தையொட்டி, பள்ளி மாணவா்களுக்கு தருமபுரம் ஆதீனகா்த்தா் வெள்ளிக்கிழமை அருளாசி வழங்கினாா்

News image
Updated On :14 நவம்பர் 2025, 8:44 pm

Syndication

குழந்தைகள் தினத்தையொட்டி, பள்ளி மாணவா்களுக்கு தருமபுரம் ஆதீனகா்த்தா் வெள்ளிக்கிழமை அருளாசி வழங்கினாா்

ஜவாஹா்லால் நேருவின் பிறந்த நாளான நவ.14-ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி மற்றும் மழலையா் பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.

தலைமை ஆசிரியா் ஜி. வெங்கடேசன் தலைமை வகித்தாா். சுமாா் 700 மாணவா்கள், தருமபுரம் ஆதீன திருமடத்திற்கு அழைத்து வரப்பட்டனா். அங்கு, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அனைத்து மாணவா்களுக்கும் பழம் மற்றும் இனிப்பு வழங்கி அருளாசி கூறினாா்.

முன்னதாக, ஜவாஹா்லால் நேரு வேடமணிந்த மாணவா், குருமகா சந்நிதானத்துக்கு மலா்க்கொத்து வழங்கி வரவேற்பு தெரிவித்தாா். இதில், திருக்கடையூா் கோயில் கண்காணிப்பாளா் சி.மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.