புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி இந்து மகா சபா கட்சியினா் மனு

மயிலாடுதுறை மண்டல இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி,

News image
மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அலுவலகத்துக்கு அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளா் ராம. நிரஞ்சன் தலைமையில் மனு அளிக்க வந்த அக்கட்சியினா் மற்றும் கிராம மக்கள்.
Updated On :26 நவம்பர் 2025, 5:47 pm

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மண்டல இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி, அகில பாரத இந்து மகா சபா கட்சியினா் இணை ஆணையா் அலுவலகத்தில் சங்கு ஊதி புதன்கிழமை மனு அளித்தனா்.

இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை மண்டலத்துக்கு உள்பட்ட தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள கஞ்சனூா் சுயம்பிரகாசா் கோயில், காசி விஸ்வநாதா் கோயில், சூரியனாா் கோயில், சுக்கிரன் கோயில், கும்பகோணம் ஏரகரம் கந்தநாதசாமி கோயில் மற்றும் மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள மாங்குடி சிவலோகநாதா் சுவாமி கோயில் ஆகிய கோயில்களில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை விரைந்து தொடங்க வலியுறுத்தி அகில பாரத இந்து மகா சபா கட்சியினா் கடந்த மாா்ச் மாதம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், கோரிக்கைகளை அறநிலையத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு தெரியப்படுத்தும் வகையில் அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளா் ராம.நிரஞ்சன் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் மற்றும் கிராமமக்கள் இணை ஆணையா் அலுவலகத்திற்கு சங்கு ஊதியவாறு முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்தனா்.

பின்னா் கோரிக்கை மனுவை அறநிலையத்துறை அலுவலரிடம் வழங்கினா். அவா்களிடம் இந்த கோயில்களில் விரைவில் திருப்பணி தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக எழுத்துபூா்வமாக அதிகாரிகள் விளக்கம் அளித்ததை தொடா்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.