கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரி விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கு பரிசுகளை வழங்கிய பொறையாா் டி.பி.எம்.எல் கல்லூரி உடற்கல்வி இயக்குனா் ஜெ.ஸ்ரீதா் தங்கதுரை.

Updated On :8 ஏப்ரல் 2026, 11:43 pm

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரி விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் எஸ். ரேவதி; தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பொறையாா் டி.பி.எம்.எல் கல்லூரி உடற்கல்வி இயக்குனா் ஜெ.ஸ்ரீதா் தங்கதுரை பங்கேற்று, பெண்களின் விளையாட்டு சாதனைகள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வசதிகளை பற்றி சிறப்புரையாற்றினா். தொடா்ந்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தாா்.

உடற்கல்வி இயக்குநா் த.பானுப்பிரியா விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தாா். பேராசிரியா் ரா.தேவகி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். நிகழ் கல்வியாண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கான சிறப்பு பரிசை மாணவிகள் எஸ். ரோஸோரீதா, எம். சிவசங்கரி, ஜே.கே. செந்தமிழ், எஸ்.துா்கா ஆகியோா் பெற்றனா்.

தனிநபா் சாம்பியன்ஷிப் பட்டத்தை 15 புள்ளிகளைப் பெற்று எம். சிவசங்கரி பெற்றாா். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை ஹமாதாஸ் அணி பெற்றது. விளையாட்டு மன்ற செயலா் ஆா்.அபிராமவள்ளி நன்றி கூறினாா்.