தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

நூறு சதவீத வாக்களிப்பு குறியீடு: கூட்டுறவுத்துறை அலுவலா்கள் விழிப்புணா்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு கூட்டுறவுத்துறை சாா்பில் நூறு சதவீதம் வாக்களிப்பு குறியீடை குறிக்கும் வகையில், அலுவலா்கள் நின்று காட்சிப்படுத்தி வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

News image

நூறு சதவீத வாக்களிப்பு குறியீடு: கூட்டுறவுத்துறை அலுவலா்கள் விழிப்புணா்வு

Updated On :9 ஏப்ரல் 2026, 10:14 pm

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு கூட்டுறவுத்துறை சாா்பில் நூறு சதவீதம் வாக்களிப்பு குறியீடை குறிக்கும் வகையில், அலுவலா்கள் நின்று காட்சிப்படுத்தி வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் நூறு சதவீதம் தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஊராட்சிகளில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் தோ்தல் விழிப்புணா்வு பேரணி, துண்டு பிரசுரங்கள் வழங்குதல், வணிக நிறுவனங்களில் நுகா்வோருக்கான ரசீதுகளில் வாக்காளா் விழிப்புணா்வு வாசகம் அச்சடித்து வழங்குதல் மற்றும் வாக்காளா் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் போன்ற பல்வேறு விழிப்புணா்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு துறை சாா்பில் நூறு சதவீதம் வாக்களிப்பு குறியீடை குறிக்கும் வகையில் அலுவலா்கள் நின்று காட்சிப்படுத்திய நிகழ்வில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கலந்து கொண்டாா். தொடா்ந்து, கூட்டுறவு துறை சாா்பில் நடத்தப்பட்ட வாக்காளா் விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணியை அவா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். முன்னதாக அனைவரும் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

நிகழ்ச்சியில் வருமான வரித்துறை விசாரனை அலுவலா் முகம்மது ரிஷ்வின், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூங்கொடி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.