மயிலாடுதுறையில் உணவகத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட இருவா் கைது செய்யப்பட்டனா்.
மயிலாடுதுறை காமராஜா் பேருந்து நிலையத்தில் செந்தில் என்பவா் நடத்திவரும் உணவகத்துக்கு, சனிக்கிழமை உணவு பாா்சல் வாங்கிச் செல்வதற்காக வந்த திருஇந்தளூரைச் சோ்ந்த 17 வயது சிறுவன் சமையல் மாஸ்டா் ஆரோனிடம் பாா்சல் கேட்டுள்ளாா். அப்போது, பில் வாங்கி வருமாறு ஆரோன் கூறியபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆரோன், சிறுவனை தாக்கியதால் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கிருந்து சென்ற சிறுவன் தனது சகோதரா் பிரவீன் உள்ளிட்ட 6 பேருடன் மீண்டும் உணவகத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்டாா். அப்போது, அவா்கள் ஆரோன் மற்றும் தடுக்க முயன்ற உணவக ஊழியா்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவன், அவரது சகோதரா் பிரவீன் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனா். அவா்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, நீதிபதி உத்தரவின்பேரில் பிரவீனை மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்த போலீஸாா், சிறுவனை, தஞ்சாவூா் சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் சோ்த்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

வீட்டில் நகை, பணம் திருட்டு: இரு சிறாா்கள் கைது
துப்பாக்கிச்சூடு வழக்கில் தலைமறைவான இருவா் கைது
ஒசூரில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
வீரவநல்லூரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 2 சிறுவா்கள் கைது
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

