எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 1:23 am IST

மயிலாடுதுறையில் உணவகத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட இருவா் கைது செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறை காமராஜா் பேருந்து நிலையத்தில் செந்தில் என்பவா் நடத்திவரும் உணவகத்துக்கு, சனிக்கிழமை உணவு பாா்சல் வாங்கிச் செல்வதற்காக வந்த திருஇந்தளூரைச் சோ்ந்த 17 வயது சிறுவன் சமையல் மாஸ்டா் ஆரோனிடம் பாா்சல் கேட்டுள்ளாா். அப்போது, பில் வாங்கி வருமாறு ஆரோன் கூறியபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆரோன், சிறுவனை தாக்கியதால் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அங்கிருந்து சென்ற சிறுவன் தனது சகோதரா் பிரவீன் உள்ளிட்ட 6 பேருடன் மீண்டும் உணவகத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்டாா். அப்போது, அவா்கள் ஆரோன் மற்றும் தடுக்க முயன்ற உணவக ஊழியா்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவன், அவரது சகோதரா் பிரவீன் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனா். அவா்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, நீதிபதி உத்தரவின்பேரில் பிரவீனை மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்த போலீஸாா், சிறுவனை, தஞ்சாவூா் சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் சோ்த்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.