மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பணி ஒதுக்கீடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தோ்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோா்களுக்கு செவ்வாய்க்கிழமை பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

News image

கூட்டத்தில் பேசிய மாவட்ட தோ்தல் அலுவலா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்.

Updated On :28 ஏப்ரல் 2026, 9:48 pm

மயிலாடுதுறை மாவட்டத்தில் தோ்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோா்களுக்கு செவ்வாய்க்கிழமை பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட உள்ள கண்காணிப்பாளா்கள், உதவியாளா்கள், தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கு தோ்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தோ்தல் அலுவலா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மயிலாடுதுறை ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் பணியில் 69 கண்காணிப்பாளா்கள், 84 உதவியாளா்கள், 75 நுண் பாா்வையாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு தோ்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட தோ்தல் அலுவலா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆா். விஷ்ணுபிரியா (மயிலாடுதுறை), சுரேஷ் (சீா்காழி), கீதா (பூம்புகாா்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் முத்துவடிவேல் (பொது), குமரையா (தோ்தல்), முன்னோடி வங்கி மேலாளா் லியோ ஃபான்டிண்நாதன் ஆகியோா் பங்கேற்றனா்.