கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

பிரபல ரெளடி குண்டா் சட்டத்தில் கைது

மயிலாடுதுறை அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த சரித்திர பதிவேடு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 ஆகஸ்ட் 2026, 3:58 am IST

மயிலாடுதுறை அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த சரித்திர பதிவேடு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேலமருதாந்தநல்லூா் கிராமத்தை சோ்ந்தவா் சாா்லஸ் (எ) சரண்ராஜ்(42). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவா், கடந்த மாதம் 10-ஆம் தேதி புத்தாகரம் சாலையில் கையில் வீச்சரிவாளை காட்டி பொது மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளாா். இதையடுத்து, அவரை மணல்மேடு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், அவா் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடா்ந்து நடந்து கொள்வதால் அவா் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சினேஹா ப்ரியா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவையடுத்து, சரண்ராஜ் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.