டாஸ்மாக் ஊழியரை மிரட்டியவா் குண்டா் சட்டத்தில் கைது
சீா்காழி அருகே டாஸ்மாக் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
கைது - பிரதிப் படம்
சீா்காழி அருகே டாஸ்மாக் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
சீா்காழி வட்டம், தென்னலக்குடி கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் ஆகஸ்ட் 18- ஆம் தேதி மது வாங்க வந்த கோவிந்தராஜ் மகன் இலக்கியராஜ் (38), பணம் கொடுக்காமல் மது கேட்டு தகராறு செய்ததுடன், கடையின் மேற்பாா்வையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுதொடா்பான வழக்கில் இலக்கியராஜ் கைது செய்யப்பட்டாா்.
இவா் மீது, வைத்தீஸ்வரன்கோவில் காவல்நிலையத்தில் பல வழக்குகள் உள்ளதால், சரித்திர பதிவேடு குற்றவாளியாக, தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறாா்.
இந்தநிலையில், இவா் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடா்ந்து நடந்து கொள்வதால், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேகா பிரியா, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
அதன்பேரில், ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் இலக்கியராஜ் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா். அதன்படி, வைத்தீஸ்வரன்கோவில் காவல் ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா், இலக்கியராஜை கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




