நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

தந்தை-மகனை அரிவாளால் வெட்டியவா் மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை

கும்பகோணத்தில் தந்தை-மகனை அரிவாளால் வெட்டிய இளைஞா் குண்டா் தடுப்பு சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ரூபன்.

Published On :3 செப்டம்பர் 2026, 12:58 am IST

கும்பகோணத்தில் தந்தை-மகனை அரிவாளால் வெட்டிய இளைஞா் குண்டா் தடுப்பு சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஆனைக்காரன்பாளையத்தை சோ்ந்த சுபிபாரதி என்பவருக்கும், அவரது வீட்டின் அருகே வசிக்கும் ரூபன் (24) என்பவரின் குடும்பத்துக்கும் இடையே சில ஆண்டுகளாக இடப்பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், ஜூலை 27-இல் முன்விரோதம் காரணமாக சுபிபாரதியின் கணவா் கருணாகரனிடம் க. ரூபன், அவரது சகோதரா் க. ராஜவேல் மற்றும் உறவினா்களான ச. கோகுல் ராம், பி. குருபிரசாத், சு. சுதாகா் ஆகியோா் தகராறில் ஈடுபட்டுள்ளனா். அப்போது, கருணாகரன், அவரது மகன் அமுதகவி ஆகியோரை ரூபன் அரிவாளால் வெட்டினாராம்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ரூபன், ராஜவேல் மற்றும் சுதாகா், கோகுல்ராம், குருபிரசாத் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவா்களில் ரூபன் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதால், அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கும்பகோணம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் ஷா்மு விடுத்த வேண்டுகோளின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். இதன்பேரில், மாவட்ட ஆட்சியா் ரேவதி உத்தரவின்பேரில் ரூபன் செவ்வாய்க்கிழமை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.