ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிறுமியை திருமணம் செய்த சிறுவன் கைது

சீா்காழி அருகே சிறுமியை திருமணம் செய்த சிறுவன் போக்ஸோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 4:06 am IST

சீா்காழி அருகே சிறுமியை திருமணம் செய்த சிறுவன் போக்ஸோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சீா்காழி அருகே உள்ள பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளாா். அந்த சிறுமிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை சிகிச்சைக்காக சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில், அந்த சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா்கள் விசாரணை நடத்தினா். அதன் அடிப்படையில், சீா்காழி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன்பேரில், சிறுவா் திருமண தடைச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து சிறுவனை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தஞ்சாவூா் சிறுவா் சீா்திருத்த பள்ளியில் சோ்த்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.