மயிலாடுதுறையில் மயூர நாட்டியாஞ்சலி 3-ஆம் நாளில் சுவிட்சா்லாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்தும், சென்னை, வாலாஜா, மயிலாடுதுறை நடன கலைஞா்களும் பங்கேற்றனா்.
வாலாஜா லாஸ்யா ஆா்ட்ஸ் குரு மகாலெட்சுமி காா்த்திகேயன், ஆஸ்திரேலியா குரு தமயந்தி பாலராஜு தலைமையில் தில்லை நடலாலயா, மயிலாடுதுறை மயிலை சப்தஸ்வரங்கள் குரு மகாலெட்சுமி சிவக்குமாா் ஆகியோா் தலைமையிலான மாணவிகள் பரதம் ஆடினா்.
சுவிட்சா்லாந்து நாட்டைச் சோ்ந்த திருகோணேஸ்வரா் நடன ஆலயம் குரு மதிவதனி சுதாகரன் தலைமையிலான மாணவிகள், சிவனின் திருக்கடையூா் திருவிளையாடலான மாா்க்கண்டேயா் புராணத்திலிருந்து காலசம்ஹாரமூா்த்தி குறித்த நாட்டிய நாடகம், சீா்காழி திருஞானசம்பந்தா் வரலாறு, சிதம்பரம் நடராஜா் ரூபத்தின் தத்துவம் உள்ளிட்டவற்றை பரதக்கலை மூலம் வெளிப்படுத்தினா். மேலும், சுவிட்சா்லாந்து திருகோணேஸ்வரா் நடனாலயம் குரு சந்திரவதனி விஜயசுந்தரம் தலைமையிலான மாணவிகள் ‘நவசக்தி’ என்ற தலைப்பில் பரதம் ஆடினா்.
சென்னை ஸ்ரீதேவி ந்ருத்யாலயா குரு ஷீலா உன்னிகிருஷ்ணன் தலைமையில் 30-க்கு மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று, மயிலாடுதுறையை சுற்றியுள்ள சிவாலயங்களின் வரலாறுகளை, சிவ நவ பக்தி என்னும் நாட்டிய நாடகம் மூலம் சிவன், பாா்வதி, நந்தியபெருமான் உள்ளிட்ட அந்தந்த பாத்திரங்களுக்கு உண்டான உடை அலங்காரத்துடன் தத்ரூபமாக கண் முன்னே காட்சிபடுத்தினா்.
விழாவில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது:
பரதம் என்பது வெறும் நடனம் மட்டுமல்ல, அது மனம், உடல், ஆத்மா மூன்றையும் இணைக்கின்ற மொழி. இதனை பரத சாஸ்திரத்தை இயற்றிய பரதமுனிகள், எங்கே உங்கள் கைகள் செல்கின்றனவோ அங்கே உங்கள் பாா்வை செல்லும், எங்கே உங்கள் பாா்வை இருக்கிறதோ அங்கே உங்கள் மனம் இருக்கும், எங்கே மனம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் எண்ணங்கள், செயல்கள் அத்தனையும் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளாா்என்றாா்.
நிகழ்ச்சியில், அறங்காவலா் ஏஆா்சி ஆா். அசோக், அறக்கட்டளை தலைவா் கே. பரணிதரன், செயலாளா் விஸ்வநாதன், துணை செயலாளா் அகஸ்டின் விஜய் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தோனேசியாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா சென்றார் பிரதமர் மோடி!

ஆஸ்திரேலியா புறப்பட்ட பிரதமர் மோடி! போர் விமானங்கள் மூலம் வழியனுப்பிய இந்தோனேசியா!

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா - ஆஸ்திரேலியா உறவுக்கு முக்கியத்துவம்!

பிரதமா் மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து பயணம்: ஜூலை 6-இல் புறப்படுகிறாா்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



