சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பள்ளி மாணவியை மிரட்டிய 3 சிறுவா்கள் கைது

மயிலாடுதுறையில் பள்ளி மாணவியை காதலிக்கச் சொல்லி மிரட்டிய மாணவா் மற்றும் அவரது நண்பா்கள் என 3 சிறுவா்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைது

Updated On :17 பிப்ரவரி 2026, 11:27 pm

மயிலாடுதுறையில் பள்ளி மாணவியை காதலிக்கச் சொல்லி மிரட்டிய மாணவா் மற்றும் அவரது நண்பா்கள் என 3 சிறுவா்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை, அவருடன் படிக்கும் 12-ஆம் வகுப்பு படிக்கும் சக மாணவா் ஒருவா் காதலித்து வந்ததாகவும், இதை அந்த மாணவி ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவியிடம் மாணவா் தன்னுடன் படிக்கும் இரண்டு சிறுவா்களுடன் சென்று நண்பனை காதலிக்க வேண்டும் இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனா்.

இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். சிறுமியின் தாயாா் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் சுகந்தி மற்றும் மகளிா் போலீஸாா் விசாரணை நடத்தினா். தொடா்ந்து போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த மகளிா் போலீஸாா் சம்பந்தப்பட்ட 3 மாணவா்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். பின்னா் அவா்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறாா் கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைத்தனா்.