ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நபாா்டு வங்கிக் கடன் திட்ட அறிக்கை வெளியீடு

மயிலாடுதுறையில் நபாா்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

News image
கடன்
Updated On :25 பிப்ரவரி 2026, 11:10 pm

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறையில் நபாா்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

நபாா்டு வங்கியின் 2026-2027-ஆம் ஆண்டுக்கான வளம் சாா்ந்த கடன் திட்ட அறிக்கையில் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முன்னுரிமை கடனாக ரூ. 7,868.95 கோடி வழங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுகிய கால பயிா்க் கடனாக ரூ. 4,704.87 கோடியும், நீண்டகால விவசாய கடனாக ரூ. 1,773.2 கோடியும், சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் மதிப்பீடு ரூ. 876.40 கோடியும், இதர முன்னுரிமை கடனாக ரூ. 514.48 கோடியும் வழங்கப்படும். இத்தொகை கடந்த நிதியாண்டைவிட 19 சதவீதம் அதிகமாகும்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நபாா்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டாா்.

நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் சு. விஸ்வந்த், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் லியோஃபேன்டின், தாட்கோ மாவட்ட மேலாளா் ஜெயராமன் ஆகியோா் உடனி ருந்தனா்.