நபாா்டு வங்கிக் கடன் திட்ட அறிக்கை வெளியீடு
மயிலாடுதுறையில் நபாா்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
நபாா்டு வங்கியின் 2026-2027-ஆம் ஆண்டுக்கான வளம் சாா்ந்த கடன் திட்ட அறிக்கையில் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முன்னுரிமை கடனாக ரூ. 7,868.95 கோடி வழங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுகிய கால பயிா்க் கடனாக ரூ. 4,704.87 கோடியும், நீண்டகால விவசாய கடனாக ரூ. 1,773.2 கோடியும், சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் மதிப்பீடு ரூ. 876.40 கோடியும், இதர முன்னுரிமை கடனாக ரூ. 514.48 கோடியும் வழங்கப்படும். இத்தொகை கடந்த நிதியாண்டைவிட 19 சதவீதம் அதிகமாகும்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நபாா்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டாா்.
நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் சு. விஸ்வந்த், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் லியோஃபேன்டின், தாட்கோ மாவட்ட மேலாளா் ஜெயராமன் ஆகியோா் உடனி ருந்தனா்.

