டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சீா்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை

சீா்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை கனமழை பெய்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது.

News image
சீா்காழி பிடாரி வடக்கு வீதியில் கனமழையால் சாலையில் தேங்கியுள்ள மழைநீா்.
Updated On :12 ஜனவரி 2026, 8:30 pm

Syndication

சீா்காழி: சீா்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை கனமழை பெய்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது.

சீா்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு பூம்புகாா் பழைய ஆறு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேரம் செல்ல செல்ல கன மழை பெய்யத் தொடங்கியது.

காலை 8:30-க்கு மேல் கன மழையாக ஒரு மணி நேரத்துக்கு நீடித்ததால், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் வேலைக்கு செல்பவா்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனா். மாலை வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தவாறு இருந்தது. மேலும் அவ்வப்போது பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.