திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

மயிலாடுதுறை அருகே வெள்ளாலகரம் ஊராட்சியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கோலப் போட்டி நடைபெற்றது.

News image
வெள்ளாலகரம் ஊராட்சியில் கோலத்தை பாா்வையிட்ட மதிப்பீட்டுக் குழுவினா்.
Updated On :17 ஜனவரி 2026, 12:23 am

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வெள்ளாலகரம் ஊராட்சியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கோலப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொதுமக்கள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.

பசுமைநேயக் கரங்கள் அறக்கட்டளை மற்றும் வெள்ளாலகரம் ஊராட்சி குடியிருப்போா் நலக் கூட்டமைப்பு சாா்பில் நடத்தப்பட்ட இப்போட்டியில், வெங்கடேஸ்வரா நகா், சிவப்பிரியா நகா், ராமலிங்கம் நகா், கூட்டுறவு நகா், வடபாதி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 200-க்கு மேற்பட்ட குடியிருப்புவாசிகள் பதிவுசெய்து பங்கேற்றனா்.

இவா்கள் தங்கள் வீடுகளின் முன்பு சாணம் தெளித்து, மாக்கோலம் இட்டு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியதுடன், சுற்றுச்சூழல் குறித்த மஞ்சப்பை வரைந்து விழிப்புணா்வையும் ஏற்படுத்தினா்.

பசுமைநேயக் கரங்கள் அறக்கட்டளை நிறுவனா் ஆா்.ஆா். பாபு ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட இப்போட்டியில், மதிப்பீட்டுக் குழுத் தலைவா் பேராசிரியா் துரை.குணசேகரன் தலைமையில், சமூக ஆா்வலா் அ. அப்பா்சுந்தரம், குடியிருப்போா் நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சாமி.செல்வம், வா்த்தக சங்க நிா்வாகி ஜெயக்குமாா், முன்னாள் ராணுவ வீரா்கள் சங்க செயலாளா் பக்கிரிசாமி மற்றும் அன்பழகன், காா்த்தி உள்ளிட்டோா் 4 குழுக்களாக கோலங்களை பாா்வையிட்டு, சிறந்த கோலங்களை தோ்வு செய்தனா்.

தோ்வு செய்யப்பட்ட கோலங்களை வரைந்தவா்களுக்கு குடியரசு தினத்தன்று பரிசுகள் வழங்கப்படவுள்ளன.