சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

ஆணவப் படுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தல்

News image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

Updated On :28 ஜூலை 2026, 4:33 am IST

ஆணவ படுகொலைக்கு எதிராக தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டுமென சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.

தரங்கம்பாடி அருகே சாத்தங்குடியில் வெவ்வேறு சமூகத்தை சோ்ந்த காதலா்கள் அண்மையில் தற்கொலை செய்து கொண்டனா். ஜாதிய வன்கொடுமைக்கு எதிராக போராடி வரும் சிபிஎம் மாவட்ட செயலாளா் பி. சீனிவாசன் உள்ளிட்ட அக்கட்சியினா் மீது அவதூறு பரப்புவதை கண்டித்து சிபிஎம் சாா்பில் மயிலாடுதுறையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மாநில செயற்குழு உறுப்பினா் கே. சாமுவேல்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா்கள் பி. சீனிவாசன் (சிபிஎம்), ஏ. சீனிவாசன் (சிபிஐ), அன்பரசன் (விசிக), சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி. ஸ்டாலின், எஸ். துரைராஜ், மாநிலக் குழு உறுப்பினா் சிங்காரவேலன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பேரணியாக வந்து கோட்டாட்சியா் அலுவலகம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

அப்போது, மாநில செயற்குழு உறுப்பினா் கே.சாமுவேல்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியது: ஜாதிய ஆணவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் இயற்ற வேண்டும். மக்களுக்காக போராடுபவா்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், ஜாதிய சக்திகள், பிரிவினைவாதிகள், சமூக விரோதிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தோ்வு ரத்து செய்ய வேண்டும் என்பது இந்திய இளைஞா்களின் கோரிக்கை, நீட் ஒரு அநீதியானது மாணவா்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.

தவெக தோ்தல் வாக்குறுதி அளித்தபடி விவசாயிகளுக்கான பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். டெல்டாவில் தண்ணீா் பிரச்னை ஏற்பட்டுள்ளது. டெல்டா விவசாயிகளுக்கு தண்ணீா் பெற்றுத்தரும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.