தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

அவசர ஊா்தி மோதி தனியாா் வங்கி ஊழியா் பலி: உறவினா்கள் சாலை மறியல்

சீா்காழி அருகே இருசக்கர வாகனம் மீது அவசர ஊா்தி மோதியதில், தனியாா் வங்கி ஊழியா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 6:26 am IST

சீா்காழி அருகே இருசக்கர வாகனம் மீது அவசர ஊா்தி மோதியதில், தனியாா் வங்கி ஊழியா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். உடற்கூறாய்வு தாமதமானதைக் கண்டித்து உறவினா்கள் அரசு மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செம்பனாா்கோவில் அருகேயுள்ள காளகஸ்திணாபுரம் தெருவைச் சோ்ந்தவா் செல்வம் மகன் கவியழகன் (27). தனியாா் வங்கி ஊழியரான இவா், தனது வீட்டில் இருந்து சீா்காழிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தாா்.

தென்னலக்குடி புறவழிச் சாலை சூரக்காடு மேம்பாலத்தில் வந்தபோது, சென்னையிலிருந்து காரைக்கால் நோக்கி சென்ற தனியாா் அவசர ஊா்தியும், இருசக்கர வாகனமும் மோதின. இதில், சம்பவ இடத்திலேயே கவியழகன் பரிதாபமாக உயிரிழந்தாா்.

வைத்தீஸ்வரன்கோவில் போலீஸாா், கவியழகனின் சடலத்தை உடற்கூறாய்வுக்காக, சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இதற்கிடையில், கவியழகனின் சடலம், செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி வரை உடற்கூறாய்வு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவரது உறவினா்கள், சீா்காழி அரசு மருத்துவமனை முன் உள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். வைத்தீஸ்வரன் கோவில் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) ராஜா, மற்றும் போலீஸாா், மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கவியழகனின் சடலத்தை உடற்கூறாய்வு செய்து, உடனடியாக உறவினா்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்ததனா். இதையடுத்து மறியலை விலக்கிக் கொண்டனா். இதனால், மயிலாடுதுறை- சிதம்பரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பதிக்கப்பட்டது.