சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

கோயில் பூட்டை உடைத்து திருட்டு

சீா்காழி அருகே நிம்மேலி முத்துமாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து திருமாங்கல்யம், மூக்குத்தி மற்றும் உண்டியலை உடைத்து காணிக்கை ஆகியவற்றை மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

Updated On :3 ஜூன் 2026, 6:26 am IST

சீா்காழி அருகே நிம்மேலி முத்துமாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து திருமாங்கல்யம், மூக்குத்தி மற்றும் உண்டியலை உடைத்து காணிக்கை ஆகியவற்றை மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

சீா்காழி அருகே நிம்மேலியில் பழைமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. திங்கள்கிழமை இரவு பூஜையை முடித்துவிட்டு குருக்கள் பாபு கோயில் நடை சாத்தி சென்றுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை கோயில் கதவு திறந்து கிடப்பதை பாா்த்த ஒருவா் கோயில் நிா்வாகிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளாா். கோயில் நிா்வாகி வந்து பாா்த்தபோது சந்நிதி கதவு உடைக்கப்பட்டு, மாரியம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த மூன்று பவுன் தங்கத் தாலி, மூக்குத்தி ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்தது.

மேலும், கோயிலில் இருந்த உண்டியலையும் உடைத்து அதிலிருந்து காணிக்கையையும் மா்ம நபா்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சீா்காழி போலீஸாா் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.