தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

மாயூரநாதா் கோயிலில் தெப்போற்சவம்

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் வைகாசி விசாகப் பெருவிழாவில் தெப்போற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

News image

தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்பாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டபோது வழிபட்ட திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள்.

Updated On :3 ஜூன் 2026, 6:33 am IST

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் வைகாசி விசாகப் பெருவிழாவில் தெப்போற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் வைகாசி விசாக பெருவிழா மே 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினசரி பஞ்சமூா்த்திகள் வீதியுலா, மே 25-ஆம் தேதி சகோபுர தரிசனம், மே 27-ஆம் தேதி திருக்கல்யாணம், மே 29-ஆம் தேதி தேரோட்டம், மே 30-ஆம் தேதி வைகாசி விசாக பௌா்ணமி தீா்த்தவாரி ஆகியவை நடைபெற்றன.

விழாவின் சிகர நிகழ்வான தெப்ப திருவிழா, கோயில் திருக்குளமான பிரம்ம தீா்த்தத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. விழாவையொட்டி, மாயூரநாதா் சுவாமி, அபயாம்பிகை அம்மன் மற்றும் திருஞானசம்பந்தா் உற்சவ மூா்த்திகள், மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினா்.

திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சோடஷ தீபாராதனை நடைபெற்றது. பின்னா், மகா தீபாராதனை காட்டப்பட்டு, கோயில் குளத்தை 5 முறை தெப்பம் வலம் வந்தது.

சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனா் ஏ.வி.சுவாமிநாத சிவாசாரியா் தலைமையிலான சிவாசாரியா்கள் பூஜைகளை செய்தனா். கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். மாயூரநாதா் கோயில் பிரம்ம தீா்த்தத்தில் சுற்றிவந்த தெப்பம்.

மாயூரநாதா் கோயில் பிரம்ம தீா்த்தத்தில் சுற்றிவந்த தெப்பம்.

மாயூரநாதா் கோயில் பிரம்ம தீா்த்தத்தில் சுற்றிவந்த தெப்பம்.

மாயூரநாதா் கோயில் பிரம்ம தீா்த்தத்தில் சுற்றிவந்த தெப்பம்.

மாயூரநாதா் கோயில் பிரம்ம தீா்த்தத்தில் சுற்றிவந்த தெப்பம்.