சீா்காழி தலைமை அஞ்சலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சீா்காழி கடைவீதியில் செயல்படும் தலைமை அஞ்சலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, மயிலாடுதுறை அஞ்சலகத்துக்கு மதியம் 3 மணியளவில் மின்னஞ்சல் வந்துள்ளது. இதுகுறித்து, சீா்காழி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் வந்து பொதுமக்கள் மற்றஉம் பணியாளா்களை வெளியேற்றி சோதனை செய்தனா். அஞ்சலகம் முழுவதும் தேடியும் வெடிகுண்டுகள் ஏதும் கண்டறியமுடிவில்லை. எனவே இது வதந்தி செய்தி என தெரியவந்தது. இதனால் அஞ்சலகத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேலூா் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனை

உதகை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவண்ணாமலை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



