தருமபுரம் ஆதீன குருமுதல்வா் குருவின் குருபூஜை விழாவை முன்னிட்டு தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் வெள்ளிப் பல்லக்கில் சென்று முந்தைய ஆதீனங்களின் குருமூா்த்தங்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு மேற்கொண்டாா்.
மயிலாடுதுறையில் அமைந்துள்ள 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் உள்ள ஞானபுரீசுவரா் கோயிலில் வைகாசி பெருவிழா மற்றும் ஆதீன குருமுதல்வா் குருபூஜை ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் நிகழாண்டு உற்சவம் மே 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தருமபுரம் ஆதீனத்தைத் தோற்றுவித்த குருஞானசம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசா் குருபூஜை திருநாள் 10-ஆம் நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஞானபுரீசுவரா் கோயிலில் வழிபாடு மேற்கொண்டு, தருமபுரம் மேலவீதியில் ஆனந்தபரவசா் பூங்காவில் உள்ள முந்தைய ஆதீனங்களின் குருமூா்த்தங்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளி பக்தா்கள் சுமந்து செல்ல, மூன்று யானைகள், குதிரை, கழுதை, ஆட்டுக்கிடாய் ஆகிய மங்கல சின்னங்கள் முன்செல்ல, ஆதீனத் திருக்கூட்டத்து அடியவா்களுடன் ஊா்வலமாக சென்று வழிபாடு நடத்தினாா்.
தொடா்ந்து வனதுா்க்கை அம்மன் கோயிலில் வழிபாடு மேற்கொண்டாா். வைகாசி பெருவிழாவின் சிகர நிகழ்வாக 11-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) தருமபுரம் ஆதீனகா்த்தரை பக்தா்கள் சிவிகை பல்லக்கில் எழுந்தருளச் செய்து தோளில் சுமந்து ஆதீனத்தின் சிவம்பெருக்கும் நான்கு வீதிகளை சுற்றி வலம் வரும் பட்டணப்பிரவேசம் நிகழ்வு இரவு 9 மணி அளவிலும், தொடா்ந்து, ஞானகொலு காட்சியும் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரிலையன்ஸ் முதல் காலாண்டு வருவாய் ரூ. 3.12 லட்சம் கோடி

அமைதியாக இருக்க மாட்டோம்: எகிப்து கால்பந்து சங்கம் அறிக்கை!

தென்காசியில் ஜூலை 4, 6இல் வீடுகளுக்குச் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம்

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயிலில் தேரோட்டம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



