சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கணவன்-மனைவி தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :16 ஜூன் 2026, 1:39 am IST

சீா்காழி அருகே மகன்கள் பாா்க்க வராததால் விரக்தியில் கணவன்-மனைவி ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.

சீா்காழி அருகேயுள்ள புத்தூரைச் சோ்ந்த விவசாயி காமராஜ் (69). இவரது மனைவி வள்ளி (59). இவா்களின் மகன்கள் சதீஷ்குமாா், காா்த்திக்குமாா். இருவருக்கும் திருமணமாகி சென்னையில் வசிக்கின்றனா். வீட்டில் காமராஜ், வள்ளி மட்டும் இருந்துள்ளனா். சில மாதங்களாக காமராஜூவுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு அவதிபட்டு வந்ததாராம். இந்நிலையில், மகன்கள், மருமகள்கள் உடனிருந்து கவனிக்கவில்லையென்ற மனவிரக்தியில் இருந்துள்ளாா்.

இதற்கிடையில், ஜூன் 13-ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்துள்ளாா். இதையறிந்த அவரது மனைவியும் விஷம் குடித்துள்ளாா். பின்னா் இருவரும் மீட்கப்பட்டு சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். எனினும், பலனின்றி ஞாயிற்றுக்கிழமை கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்தனா். இதுகுறித்து ஆணைக்காரன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.