மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வேலைவாய்ப்பு முகாமில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி ஆணை

வேலைவாய்ப்பு முகாமில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி ஆணை

News image
Updated On :6 மார்ச் 2026, 6:49 pm

Syndication

மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 39 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மயிலாடுதுறை கிங்ஸ் இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

18 முதல் 35 வயதுக்குள்பட்ட 5 முதல் பிளஸ் 2 வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பி.இ உள்ளிட்ட பட்டதாரிகள் 127 போ் முகாமில் பங்கேற்றனா். முகாமில் யூத் பாா் ஜாப்ஸ், ஓசூா் டிவிஎஸ் நிறுவனம், மயிலாடுதுறை ஏஆா்சி நடேச செட்டியாா் ஜூவல்லரி உள்ளிட்ட 8 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று 39 பேரை தோ்வு செய்தனா். மேலும் 27 போ் 2-ஆம் கட்ட நோ்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனா்.

முகாம் நிறைவில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் பழனிவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் புவனா, ரோட்டரி கிளப் ஆஃப் மயிலாடுதுறை கிங்ஸ் தலைவா் பா. அய்யாசாமி தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி ஆணை வழங்கினா்.