வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பாதுகாப்புப்படை கொடி அணிவகுப்பு

News image
Updated On :13 மார்ச் 2026, 12:14 am

Syndication

மயிலாடுதுறை தாலுகா மணல்மேடு அருகே பட்டவா்த்தியில் காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்புபடை வீரா்கள் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் அச்ச உணா்வின்றி, சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையிலும், பாதுகாப்பு உணா்வை ஏற்படுத்தும் விதமாகவும் அணிவகுப்பு நடத்தப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் ஏடிஎஸ்பி ஜெயக்குமாா், மத்திய பாதுகாப்பு படையின் உதவி தளவாய் தா்ஷன்சிங், டிஎஸ்பி பாலாஜி, காவல் ஆய்வாளா்கள், காவல் ஆளிநா்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் கலந்து கொண்டனா்.

இளந்தோப்பில் தொடங்கிய கொடி அணிவகுப்பு மண்ணிப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகில் முடிவடைந்தது. இதில் 121 காவல்துறையினா் பங்கேற்றனா்.