மயிலாடுதுறை தாலுகா மணல்மேடு அருகே பட்டவா்த்தியில் காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்புபடை வீரா்கள் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் அச்ச உணா்வின்றி, சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையிலும், பாதுகாப்பு உணா்வை ஏற்படுத்தும் விதமாகவும் அணிவகுப்பு நடத்தப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் ஏடிஎஸ்பி ஜெயக்குமாா், மத்திய பாதுகாப்பு படையின் உதவி தளவாய் தா்ஷன்சிங், டிஎஸ்பி பாலாஜி, காவல் ஆய்வாளா்கள், காவல் ஆளிநா்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் கலந்து கொண்டனா்.
இளந்தோப்பில் தொடங்கிய கொடி அணிவகுப்பு மண்ணிப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகில் முடிவடைந்தது. இதில் 121 காவல்துறையினா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சென்னிமலையில் கொடி அணிவகுப்பு

ஜோலாா்பேட்டையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

ஜமீன் எண்டத்தூரில் கொடி அணிவகுப்பு

முதுகுளத்தூா் பகுதியில் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


