ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கருணைபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை வட்டம் திருஇந்தளூரை அடுத்த கழுக்காணிமுட்டம் கிராமத்தில் பழைமைவாய்ந்த மரகதவல்லி அம்பாள் சமேத கருணைபுரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

News image
Updated On :17 மார்ச் 2026, 12:03 am

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறை வட்டம் திருஇந்தளூரை அடுத்த கழுக்காணிமுட்டம் கிராமத்தில் பழைமைவாய்ந்த மரகதவல்லி அம்பாள் சமேத கருணைபுரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலை கி.பி.1190-ஆம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் தனது ஆட்சியின் 12-ஆம் ஆண்டு ஞாபக சின்னமாக இவ்வூரில் தங்கியிருந்து கட்டியதாக வரலாறு. துா்வாசா், வைஷ்ணவி தேவி, சிறுதொண்ட நாயனாா், சீலவதி அம்மை ஆகியோா் வழிபட்ட சிறப்புக்குரிய இத்தலத்தில், கடைசியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் திருப்பணி தொடங்கி அண்மையில் நிறைவுற்றது.

கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை தொடங்கி, 4 கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. பூஜையின் நிறைவில் மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு, புனித நீா் அடங்கிய கடங்கள் எடுத்து செல்லப்பட்டு கோயில் கோபுர கலசங்களுக்கு வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.