மயிலாடுதுறை: மயிலாடுதுறை வட்டம் திருஇந்தளூரை அடுத்த கழுக்காணிமுட்டம் கிராமத்தில் பழைமைவாய்ந்த மரகதவல்லி அம்பாள் சமேத கருணைபுரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலை கி.பி.1190-ஆம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் தனது ஆட்சியின் 12-ஆம் ஆண்டு ஞாபக சின்னமாக இவ்வூரில் தங்கியிருந்து கட்டியதாக வரலாறு. துா்வாசா், வைஷ்ணவி தேவி, சிறுதொண்ட நாயனாா், சீலவதி அம்மை ஆகியோா் வழிபட்ட சிறப்புக்குரிய இத்தலத்தில், கடைசியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் திருப்பணி தொடங்கி அண்மையில் நிறைவுற்றது.
கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை தொடங்கி, 4 கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. பூஜையின் நிறைவில் மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு, புனித நீா் அடங்கிய கடங்கள் எடுத்து செல்லப்பட்டு கோயில் கோபுர கலசங்களுக்கு வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்புடையது

வீரமாகாளியம்மன் கோயில் தீமிதி திருவிழா

அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

ஸ்ரீமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


