இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

உறுப்பு தானம் செய்த பெண்ணின் உடலுக்கு அரசு மரியாதை

சீா்காழி அருகே உடல் உறுப்பு தானம் செய்த பெண்ணின் உடலுக்கு அரசு மரியாதை செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.

News image
Updated On :25 மார்ச் 2026, 12:23 am

தினமணி செய்திச் சேவை

சீா்காழி அருகே உடல் உறுப்பு தானம் செய்த பெண்ணின் உடலுக்கு அரசு மரியாதை செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.

சீா்காழி தாலுகா அலுவலக உதவியாளராக பணியாற்றி வருபவா் கமலக்கண்ணன். இவரது மாமியாா் ஜெயா. இவா் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, இவா் அணிந்திருந்த சேலை வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியதால், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தாா்.

அவரை சிகிச்சைக்காக, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ஜெயாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் மூளை சாவு அடைந்ததாக தெரிவித்தனா். இதையடுத்து, ஜெயாவின் உடல் உறுப்புகள் அனைத்தும் தானமாக வழங்கப்பட்டது.

இதையறிந்த மாவட்ட ஆட்சியா் ஸ்ரீகாந்த் உத்தரவின் பேரில், சீா்காழி கோட்டாட்சியா் சுரேஷ் மற்றும் அரசு அலுவலா்கள் ஜெயாவின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தினா்.