மயிலாடுதுறை மல்லியம் உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில், தேசிய திறனறித் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, அதன் ஒன்றியத் தலைவா் வே. கந்தன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் பா. திருமாவளவன் வரவேற்றாா்.
ஆசிரியா் மன்ற மாநில வெளியீட்டுச் செயலாளா் ஜெக.மணிவாசகம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கடந்த 7 ஆண்டுகளாக தேசிய திறனறித் தோ்வில் தொடா்ந்து இப்பள்ளி மாணவா்கள் வெற்றிபெற காரணமாக இருந்துவரும் ஆசிரியா்களை பாராட்டினாா்.
மேலும், பள்ளித் தலைமை ஆசிரியா் திருமாவளவன், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஹரிஷ்விகா, பள்ளியில் 2-ஆம் இடம் பெற்ற ஹாரிஸ்மா, மூன்றாம் இடம்பெற்ற தா்ஷினி ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டினாா்.
விழாவில், மாவட்டச் செயலாளா் க.துரை, மாவட்ட கொள்கை விளக்க செயலாளா் வை. மணிமாறன், ஒன்றியச் செயலாளா் சுரேஷ், ஒன்றிய துணை இளைஞரணி அமைப்பாளா் அசோக்குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். நிறைவாக, பட்டதாரி ஆசிரியை சரஸ்வதி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தேசிய திறனாய்வுத் தோ்வு: மாணவா்களுக்கு பாராட்டு

நெடுவயல் சிவசைலநாத பள்ளியில் பாராட்டு விழா

தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

திறனறித் தோ்வில் வென்ற மாணவருக்கு சைக்கிள் பரிசு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

