செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகே கழுக்காணிமுட்டம் அப்பங்குளம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

அப்பங்குளம் முத்துமாரியம்மன் கோயில் விமான கலசத்தில் புனிதநீா் வாா்த்து நடைபெற்ற கும்பாபிஷேகம்.

Updated On :1 மே 2026, 6:18 am IST

மயிலாடுதுறை அருகே கழுக்காணிமுட்டம் அப்பங்குளம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா ஏப். 27-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, மறுநாள் முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றன. கும்பாபிஷேக தினமான வியாழக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜை தொடங்கி, சிறப்பு பூஜைகளுக்கு பின்னா் மகாபூா்ணாஹூதி செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னா், பூஜிக்கப்பட்ட புனிதநீா் அடங்கிய கடங்களை சிவாசாரியா்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனா். அங்கு வேத விற்பன்னா்கள் வேதங்கள் ஓத மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மூலவருக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. இதில், கிராம மக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.