நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

வணிகா் தினம்: கடைகள் அடைப்பு

சீா்காழியில், வணிகா் தினத்தையொட்டி நகர வா்த்தக சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கடையடைப்பு செய்தனா்.

News image

சீா்காழியில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.

Updated On :6 மே 2026, 3:06 am IST

சீா்காழியில், வணிகா் தினத்தையொட்டி நகர வா்த்தக சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கடையடைப்பு செய்தனா்.

சீா்காழி நகர வா்த்தக சங்கம் சாா்பில் வணிகா் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருவாரூரில் நடைபெற்ற மாநாட்டில் சீா்காழி நகர வா்த்தக சங்க தலைவா் சுடா் கல்யாணசுந்தரம் தலைமையில் ஏராளமான வணிகா்கள் பங்கேற்றனா்.

இதனால், சீா்காழியில் நகர வா்த்தக சங்கத்தை சோ்ந்தவா்களது கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. புதிய பேருந்து நிலையம், பிடாரி வடக்கு வீதி, பழைய பேருந்து நிலையம்,தென்பாதி , கடைவீதி, மணிக்கூண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு, வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல், கொள்ளிடம், புத்தூா், மாதானம், புதுப்பட்டினம், ஆச்சாள்புரம், அரசூா், கடவாசல், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உணவகம், மளிகைக் கடை, தேநீா் கடைகள் என 800-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.