சீா்காழியில், வணிகா் தினத்தையொட்டி நகர வா்த்தக சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கடையடைப்பு செய்தனா்.
சீா்காழி நகர வா்த்தக சங்கம் சாா்பில் வணிகா் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருவாரூரில் நடைபெற்ற மாநாட்டில் சீா்காழி நகர வா்த்தக சங்க தலைவா் சுடா் கல்யாணசுந்தரம் தலைமையில் ஏராளமான வணிகா்கள் பங்கேற்றனா்.
இதனால், சீா்காழியில் நகர வா்த்தக சங்கத்தை சோ்ந்தவா்களது கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. புதிய பேருந்து நிலையம், பிடாரி வடக்கு வீதி, பழைய பேருந்து நிலையம்,தென்பாதி , கடைவீதி, மணிக்கூண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு, வெறிச்சோடி காணப்பட்டன.
இதேபோல், கொள்ளிடம், புத்தூா், மாதானம், புதுப்பட்டினம், ஆச்சாள்புரம், அரசூா், கடவாசல், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உணவகம், மளிகைக் கடை, தேநீா் கடைகள் என 800-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
தொடர்புடையது

சீா்காழி: டாஸ்மாக் பணியாளா் இருவா் மீது வழக்குப் பதிவு; மாவட்டத்தில் 3 மணி நேரம் கடைகள் மூடல்

ராஜபாளையம் சந்தையில் கடைகள் அடைப்பு

மாா்த்தாண்டத்தில் வியாபாரிகள் போராட்டம்

வாக்குப் பதிவு: வெறிச்சோடிய காரைக்கால்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



