ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மாா்த்தாண்டத்தில் வியாபாரிகள் போராட்டம்

மாா்த்தாண்டம் புதிய காய்கனி சந்தையில் மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட வணிக சங்க நிா்வாகிகள்.

News image

மாா்த்தாண்டம் புதிய காய்கனி சந்தையில் மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட வணிக சங்க நிா்வாகிகள்.

Updated On :2 மே 2026, 2:28 am IST

மாா்த்தாண்டம் காய்கனி சந்தையில் மின் வசதி கோரி வியாபாரிகள் வெள்ளிக்கிழமை இரவு மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாா்த்தாண்டம் காய்கனி சந்தை ரூ. 15 கோடியில் நவீன வடிவமைப்புடன் கட்டப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு 187 கடைகள் உள்ளன. இதில் முன்பக்க உள்ள 36 கடைகளில் பெரும்பாலானவை ரூ. 40 முதல் ரூ. 80 ஆயிரம் வரை மாத வாடகையில் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

இங்கு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தாலும் மின் இணைப்பு, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. இதுகுறித்து காய்கனி சந்தை வியாபாரிகள், மாா்த்தாண்டம் நகர வா்த்தக சங்கத் தலைவா் தினகா் தலைமையில் அண்மையில் குழித்துறை நகராட்சி ஆணையாளா் வெங்கடாசலபதியிடம் மனு அளித்தனா். அப்போது அவா், இந்த பிரச்னைக்கு ஓரிரு நாள்களில் தீா்வு காணப்படும் என உறுதியளித்திருந்தாா். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வியாபாரிகள் குற்றம்சாட்டினா்.

இதைத் தொடா்ந்து மாா்த்தாண்டம் நகர வா்த்தக சங்கத் தலைவா் தலைமையில் வா்த்தக சங்க பேரவை மாநில துணைத் தலைவா் கருங்கல் ஆா். ஜாா்ஜ், நகர வா்த்தக சங்கச் செயலா் ராஜ் பினோ. ஜெயசிங், சுனில், ராஜ்குமாா், சதீஷ்குமாா், வியாபாரிகள் சந்தை கடையின் முன் நின்று மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.