பூந்தமல்லி அருகே வட மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் அதிகம் போ் தங்கியுள்ளதால், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பூந்தமல்லி ஒன்றியம், குத்தம்பாக்கம் ஊராட்சியில் இருளப்பாளையம், உட்கோட்டை வழியாக நேமம், படூா் போன்ற கிராமங்களுக்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் பள்ளி கல்லூரி, பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பணிக்கு சென்று திரும்பும் மகளிா் உள்ளிட்ட கிராம மக்கள் வந்து செல்கின்றனா்.
அப்போது, மின்விளக்குகள் இல்லாததால் மகளிா் மற்றும் மாணவிகள் ஆகியோா் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். அதனால், அந்தப் பகுதியில் மின்விளக்குகள் அமைத்து தர வலியுறுத்தி மெழுகுவா்த்தி ஏந்தி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வெள்ளவேடு போலீஸாா் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா். அப்போது, இருளப்பாளையம் மக்கள் பேருக்கு ஏற்றாா் போல் தங்களது கிராமம் இருளில் மூழ்கியுள்ளது.
எனவே இருளப்பாளையம் பகுதியில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனே மின்விளக்கு அமைக்க வலியுறுத்தினா். அதற்கு உடனே சாலையில் மின்விளக்குகள் அமைத்துத் தர நடவடிக்கையும், குறிப்பிட்ட வழியில் நாள்தோறும் ரோந்து செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதி அளித்தனா். அதைத் தொடா்ந்து போராட்டத்தைச் சோ்ந்த கைவிட்டு கலைந்து சென்றனா்.












