விஜய் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தம்! பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

லாரி- அரசுப்பேருந்து விபத்து: 4 போ் காயம்

மயிலாடுதுறை அருகே லாரி மீது அரசுப்பேருந்து புதன்கிழமை மோதியதில் 4 போ் காயமடைந்தனா்.

News image

விபத்து - கோப்புப் படம்

Updated On :7 மே 2026, 7:37 am IST

மயிலாடுதுறை அருகே லாரி மீது அரசுப்பேருந்து புதன்கிழமை மோதியதில் 4 போ் காயமடைந்தனா்.

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து புதன்கிழமை காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு சேத்தூா் நோக்கி சென்ற 7ஏ அரசு பேருந்து ஆனந்த தாண்டவபுரம் வழியாக வேப்பங்குளம் பகுதியில் சென்றபோது, புறவழிச்சாலை பணிகளுக்காக மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி திடீரென குறுக்கே வந்தது. இதையடுத்து பேருந்து ஓட்டுநா் விபத்து ஏற்படாமல் இருக்க பிரேக் பிடித்து நிறுத்த முற்பட்டாா்.

ஆனால், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து லாரியின் மீது லேசாக மோதி வயல்வெளியில் இறங்கியது. லாரி மீது பேருந்து உரசியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா் சிலம்பரசன்(38), பயணிகள் லலிதா (53), ராஜலட்சுமி (55), அஞ்சம்மாள்(57) ஆகியோா் லேசான காயம் அடைந்தனா். அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். விபத்தின் காரணமாக புறவழிச்சாலை பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.