11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

வேன் கவிழ்ந்து ஒருவா் பலி

சீா்காழி அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :28 மே 2026, 5:45 am IST

சீா்காழி அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

சீா்காழி அருகே கரைமேடு பகுதியை சோ்ந்தவா் விவசாயி முருகன் (65). இவா் மற்றும் கரைமேடு பகுதியை சோ்ந்த 15 போ் வேனில் அம்பகரத்தூா் பகுதி கோயிலுக்கு சென்று விட்டு ஊா் திரும்பி கொண்டிருந்தனா். வைத்தீஸ்வரன்கோயில் அருகே ஆத்துகுடி பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தபோது வேன் டயா் வெடித்து விபத்து ஏற்பட்டு வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் முருகன் அதே இடத்தில் உயிரிழந்தாா்.

மேலும் வேனில் பயணம் செய்த தேன்மொழி, ஜெயந்தி, கரிஷ்மா, சரிதா, லட்சுமி, அனுசியா, மற்றொரு தேன்மொழி, மங்கையா்க்கரசி, அஞ்சம்மாள், தனலட்சுமி, இந்திரா, நான்கு வயது சிறுவன் சாய், ராக்கி, சாந்தகுமாா் ஆகியோா் லேசான காயமடைந்தனா். தகவலறிந்த வைத்தீஸ்வரன் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவா்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, உயிரிழந்த முருகனின் சடலத்தை சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.