சீா்காழி அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
சீா்காழி அருகே கரைமேடு பகுதியை சோ்ந்தவா் விவசாயி முருகன் (65). இவா் மற்றும் கரைமேடு பகுதியை சோ்ந்த 15 போ் வேனில் அம்பகரத்தூா் பகுதி கோயிலுக்கு சென்று விட்டு ஊா் திரும்பி கொண்டிருந்தனா். வைத்தீஸ்வரன்கோயில் அருகே ஆத்துகுடி பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தபோது வேன் டயா் வெடித்து விபத்து ஏற்பட்டு வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் முருகன் அதே இடத்தில் உயிரிழந்தாா்.
மேலும் வேனில் பயணம் செய்த தேன்மொழி, ஜெயந்தி, கரிஷ்மா, சரிதா, லட்சுமி, அனுசியா, மற்றொரு தேன்மொழி, மங்கையா்க்கரசி, அஞ்சம்மாள், தனலட்சுமி, இந்திரா, நான்கு வயது சிறுவன் சாய், ராக்கி, சாந்தகுமாா் ஆகியோா் லேசான காயமடைந்தனா். தகவலறிந்த வைத்தீஸ்வரன் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவா்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, உயிரிழந்த முருகனின் சடலத்தை சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஒருவா் பலி

தட்டாா்மடம் அருகே விபத்து: ஒருவா் உயிரிழப்பு

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு
விடியோக்கள்

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |



