/
மயிலாடுதுறை அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை தந்தவா் போக்ஸோவில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி முட்டம் சிவன்கோயில் தெருவை சோ்ந்த மகாலிங்கம் மகன் சிலம்பரசன் (42), கேஸ் ஸ்டவ் பழுது நீக்கும் தொழில் செய்கிறாா். இவா் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தாராம். இதை வெளியில் சொன்னால் கொலை செய்வதாக மிரட்டினாராம். அச்சிறுமி தாயாரிடம் இதைச் சொன்னாராம்.
மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி மற்றும் மகளிா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து சிலம்பரசனைக் கைது செய்தனா்.






