நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் பிரம்மோத்சவ சப்பர பவனி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் பிரம்மோத்சவம் கடந்த 3-ம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி நடைபெறுகிறது. திருவிழா கொடியேற்றம் மே 4-ம் தேதி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, தினமும் வெவ்வேறு வாகனங்களில், வெவ்வேறு அலங்காரத்தில் அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. புதன்கிழமை இரவு வசந்த உத்சவம் நடைபெற்றது.
இதையொட்டி, அம்பாள் மகாலெட்சுமி அலங்காரத்தில் சின்ன யானை வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை இரவு ஓலை சப்பர பவனி நடைபெற்றது. ரிஷப வாகனத்தில் அம்பாள் ஓலை சப்பரத்தில் காட்சியளித்தார். பாரம்பரிய முறைப்படி, வழக்கமான வீதிகளில் ஓலை சப்பரம் வலம் வந்து நிலையை அடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
செடில் உத்சவம்: பிரம்மோத்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் விழா மற்றும் செடில் உத்சவம் ஆகியன ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை திருத்தேரோட்டமும், மாலையில் செடில் உத்சவமும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


